செய்திகள்
தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2020-12-29 13:37 GMT   |   Update On 2020-12-29 13:37 GMT
கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தை சேர்ந்த நடராசன் என்பவரின் மனைவி விஜயா (வயது 46). இவர் கடநத 25-ந் தேதி வீட்டில் தனியே இருந்த போது அரளி விதை(விஷம்) அரைத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News