செய்திகள்
விபத்து

பெருமாநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- பனியன் நிறுவன தொழிலாளி பலி

Published On 2020-12-27 12:34 GMT   |   Update On 2020-12-27 12:34 GMT
பெருமாநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பனியன் நிறுவன தொழிலாளி பலியானார்.
பெருமாநல்லூர்:

பெருமாநல்லூரை அடுத்துள்ள சொக்கனூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது32). பனியன் நிறுவன தொழிலாளி. இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் குன்னத்தூர்-நம்பியூர் சாலையில், சொக்கனூர் ஊராட்சி அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது, கோபியை சேர்ந்த கந்தசாமி (38) தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதியதில் பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பெருமாநல்லூர் போலீசார் கந்தசாமியை கைது செய்தனர்.
Tags:    

Similar News