செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-12-25 10:30 GMT   |   Update On 2020-12-25 10:30 GMT
தமிழகத்தில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் 3நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

28.12.2020. மற்றும் 29.12.2020 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை (கோவை) 1 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது.

வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வடக்கு அரபிக்கடல், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News