செய்திகள்
கோப்பு படம்.

குடவாசல் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

Published On 2020-12-23 14:53 GMT   |   Update On 2020-12-23 14:53 GMT
குடவாசல் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குடவாசல்:

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள செல்லூர் அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் ரங்கராஜ். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது63). இவர் நேற்று காலை தனது வீட்டின் பின் பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டின் முன்பக்க வாசல் வழியாக வீட்டுக்குள் புகுந்து விஜயலட்சுமியின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார்.

இதனால் விஜயலட்சுமி கூச்சல் போட்டதை தொடர்ந்து அவருடைய கணவர் ரங்கராஜ் ஓடி வந்தார். ஆனால் மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடினார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் தங்க சங்கிலியுடன் தப்பி ஓடிய நபரை துரத்தி சென்றனர். இதனிடையே அந்த நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று, தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து விஜயலட்சுமி குடவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 1 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News