செய்திகள்
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2000 கனஅடியாக சரிவு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2000 கன அடியாக மேலும் சரிந்தது.
பென்னாகரம்:
கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து விட்டது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ்.அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீர் குறைக்கபட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்துள்ளது.
தமிழக எல்லையான பிலுகுண்டுலுவில் நேற்றுமுன்தினம் 3000 அடியாக இருந்தது. நேற்று மாலை 5 மணியளவில் 2500 கனஅடியாக சரிந்தது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 2000 கன அடியாக மேலும் சரிந்தது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ் அருவி, மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் குறைந்த அளவில் தான் தண்ணீர் கொட்டி வருகிறது.
கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து விட்டது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ்.அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீர் குறைக்கபட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்துள்ளது.
தமிழக எல்லையான பிலுகுண்டுலுவில் நேற்றுமுன்தினம் 3000 அடியாக இருந்தது. நேற்று மாலை 5 மணியளவில் 2500 கனஅடியாக சரிந்தது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 2000 கன அடியாக மேலும் சரிந்தது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ் அருவி, மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் குறைந்த அளவில் தான் தண்ணீர் கொட்டி வருகிறது.