செய்திகள்
கோப்பு படம்.

பெருமாநல்லூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2020-12-21 14:19 GMT   |   Update On 2020-12-21 14:19 GMT
பெருமாநல்லூர் பகுதியில் நாளை மின் கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
திருப்பூர்:

பெருமாநல்லூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பெருமாநல்லூர் மற்றும் மில் உயரழுத்த பாதையில் மின் கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளதால் இந்த துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட கூத்தம்பாளையம், கூத்தம்பாளையம் பிரிவு, கணக்கம்பாளையம் பிரிவு, ஜே.பி.நகர், அண்ணா நகர், பாண்டியன் நகர், குமரன் காலனி, அண்ணையம்பாளையம், செட்டிபாளையம், அன்னை சத்யா காலனி, பொன்னம்மாள் நகர் மற்றும் காமராஜ் நகரில் மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News