செய்திகள்
கோப்புபடம்

துறையூர் அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

Published On 2020-12-21 10:20 GMT   |   Update On 2020-12-21 10:20 GMT
துறையூர் அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துறையூர்:

சென்னையை சேர்ந்தவர் ரெங்கநாதன்(வயது 57). இவர் துறையூரில் உள்ள கோலோச்சும் முருகன் கோவில் மண்டபத்தில் தங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்று ரெங்கநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அவர் எதற்காக தற்கொலை செய்த கொண்டார் என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News