செய்திகள்
ஆத்தூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள வளையமாதேவி கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் மாதேஸ்வரன். லாரி டிரைவர். இவரது மனைவி கவுசல்யா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு வயதில் நித்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கவுசல்யா கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கவுசல்யா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய தகவலறிந்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் துரை விசாரணை நடத்தி வருகிறார்.