செய்திகள்
வாக்காளர் பட்டியல்

வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் நாளை திருச்சி வருகை

Published On 2020-12-11 09:47 GMT   |   Update On 2020-12-11 09:47 GMT
இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சஜன்சிங் ஆர்.சவான், திருச்சியில் நாளை நடக்கும் சிறப்பு முகாமை பார்வையிடுகிறார்.
திருச்சி:

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டம் கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:- திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 1.1.2021 தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க முறைத் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக முதல்கட்ட சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் 21 மற்றும் 22-ந் தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 64,785 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அவற்றில் 63,201 கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய 2 நாட்கள் 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. படிவங்கள் 6, 7, 8 மற்றும் 8-ஏ படிவங்கள் தொடர்பான அறிக்கை முறையே இணையதளத்தில் நாள்தோறும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை பெறப்பட்ட படிவங்களின் விவரங்களை மாவட்ட இணையதள முகவரியான tiruchirappalli.nic.in மூலம் பார்த்துக்கொள்ளலாம். இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சஜன்சிங் ஆர்.சவான், திருச்சியில் நாளை நடக்கும் சிறப்பு முகாமை பார்வையிடுகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News