செய்திகள்
ஓட்டலில் மது குடிக்க அனுமதித்த உரிமையாளர் கைது
நொய்யல் அருகே ஓட்டலில் மது குடிக்க அனுமதித்த உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:
கரூர் மாவட்டம் தளவாபாளையம் கடைவீதி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சிலர் அமர்ந்து மது குடிப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு சிலர் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். இதையடுத்து மது குடிக்க அனுமதித்த ஓட்டல் உரிமையாளர் தளவாபாளையம் கடை வீதியை சேர்ந்த சண்முகம் (வயது 51) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மதுப்பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.