செய்திகள்
கைது

தஞ்சை மாவட்டத்தில் லாட்டரி சீட்டுகள் விற்ற 7 பேர் கைது

Published On 2020-12-01 10:11 GMT   |   Update On 2020-12-01 10:11 GMT
தஞ்சை மாவட்டத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் ஆர்ச் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகம் படும் வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சை பாலோபநந்தவனம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் (வயது36) என்பதும், அவர் லாட்டரி சீட்டுகள் விற்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தியாகராஜனை கைது செய்து, அவரிடம் இருந்து தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதே போல் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட சோதனையில் மதுக்கூர், அதிராம்பட்டினம், அய்யம்பேட்டை, கும்பகோணம், திருவோணம், வாட்டாத்திக்கோட்டை ஆகிய பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிசீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News