செய்திகள்
விபத்து பலி

அவினாசி அருகே கார் மோதி தொழிலாளி பலி

Published On 2020-12-01 07:48 GMT   |   Update On 2020-12-01 07:48 GMT
அவினாசி அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி:

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பானுபிரதாப் (வயது 33). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ஒரு சிமெண்டு குடோனில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அவினாசியை அடுத்த அவினாசிலிங்கம்பாளையம் பைபாஸ் ரோட்டை கடந்து சென்றார். அப்போது சேலத்திலிருந்து கோவை நோக்கி வேகமாக சென்ற கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பானுபிரதாப் பலத்த காயமடைந்தார். ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News