செய்திகள்
கோப்புபடம்

கூடலூரில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

Published On 2020-11-30 12:13 GMT   |   Update On 2020-11-30 12:13 GMT
கூடலூர் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்:

கூடலூர் 12-வது வார்டு பொம்மஜ்ஜியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மூர்த்தி (வயது 27). வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. நேற்று இவர் காய்கறி மார்க்கெட் அருகே உள்ள பொம்மைய சாமி கோவிலில் திருக்கார்த்திகை விழாவையொட்டி வெல்டிங் பணி செய்து கொண்டிருந்தார். 

அப்போது கோவிலில் அலங்கரிக்கப்பட்டிருந்த வண்ண விளக்கு உடைந்தது. இதில் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News