செய்திகள்
வானிலை நிலவரம்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-11-30 05:44 GMT   |   Update On 2020-11-30 05:45 GMT
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலை கொண்டுள்ளது.

டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்திலும் கனமழை பெய்யக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News