செய்திகள்
திருச்சி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருச்சி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ராமச்சந்திராநகர் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது இந்திரா நகர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (வயது 20) கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தார். இதைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் ரூ.150-ஐ பறிமுதல் செய்தனர்.