செய்திகள்
திண்டுக்கல் அருகே ஏ.டி.எம். மைய கண்ணாடி கதவு உடைப்பு
திண்டுக்கல் அருகே ஏ.டி.எம். மைய கண்ணாடி கதவை மர்ம நபர்கள் உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபால்பட்டி:
திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில், அரசுடமையாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்திற்கு காவலாளி கிடையாது. நேற்று அந்த ஏ.டி.எம். மையத்தின் முன்பக்க உள்ள கண்ணாடி கதவு உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஏ.டி.எம். எந்திரம் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டனர். மர்மநபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் திருட முயன்று, முயற்சி பலிக்காததால் கோபத்தில் கண்ணாடி கதவை உடைத்தார்களா? அல்லது மதுபோதையில் உடைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை கண்டுபிடிக்க அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.