செய்திகள்
பரமக்குடியில் பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவன் பலி
பரமக்குடியில் பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமக்குடி:
திருச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ்கண்ணன். இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களது மகன் முகிலன் (வயது14). திருச்சியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். பாக்கியலட்சுமி தனது மகனுடன் தீபாவளி பண்டிகைக்காக பரமக்குடி மணி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்தநிலையில் சாப்பாட்டிற்கு தயிர் வாங்க சைக்கிளில் கடைக்கு சென்றுள்ளான்.
அப்போது சாலையை கடக்க முயன்றபோது மதுரையில் இருந்து பரமக்குடி நோக்கி வந்த தனியார் பஸ் முகிலனின் மீது மோதியது. இதில் முகிலன் பஸ்சின் பக்கவாட்டில் சிக்கி சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டான். இதில் அவன் பஸ் சக்கரத்தில் சிக்கினான். இதை கண்டு அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். உடனே பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சக்கரத்தில் சிக்கி இருந்த முகிலனை மீட்டனர். அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவனை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்து போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.இது குறித்து பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ்கண்ணன். இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களது மகன் முகிலன் (வயது14). திருச்சியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். பாக்கியலட்சுமி தனது மகனுடன் தீபாவளி பண்டிகைக்காக பரமக்குடி மணி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்தநிலையில் சாப்பாட்டிற்கு தயிர் வாங்க சைக்கிளில் கடைக்கு சென்றுள்ளான்.
அப்போது சாலையை கடக்க முயன்றபோது மதுரையில் இருந்து பரமக்குடி நோக்கி வந்த தனியார் பஸ் முகிலனின் மீது மோதியது. இதில் முகிலன் பஸ்சின் பக்கவாட்டில் சிக்கி சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டான். இதில் அவன் பஸ் சக்கரத்தில் சிக்கினான். இதை கண்டு அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். உடனே பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சக்கரத்தில் சிக்கி இருந்த முகிலனை மீட்டனர். அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவனை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்து போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.இது குறித்து பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.