செய்திகள்
கரூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
கரூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து தலைமையிலான போலீசார் காந்திகிராமம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்த பாலாஜி (வயது 28), சூரியா (19) ஆகியோர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 900 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.