செய்திகள்
கைது

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் கொலை- மனைவி உள்பட 3 பேர் கைது

Published On 2020-11-21 05:34 GMT   |   Update On 2020-11-21 05:34 GMT
கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொன்ற வழக்கில் மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணராயபுரம்:

திருச்சி மாவட்டம் சீலைப்பிள்ளையார் புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்மணி(வயது 52). இவரது மனைவி திலகவதி(35). இவர்களுக்கு ஈஸ்வரி, கீர்த்தனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் காட்டுப்புத்தூரை சேர்ந்த பால்காரர் ராஜா என்பவருக்கும், திலகவதிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த அருள்மணி அவர்களை கண்டித்தார். அதனையும் மீறி கள்ளக்காதலர்கள் பழகி வந்தனர். இதனால், அருள்மணியும், திலகவதியும் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர்.

இந்தநிலையில், சம்பவத்தன்று அருள்மணி குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த திலகவதி கணவரை தீர்த்துக்கட்டுமாறு ராஜாவிடம் கூறியதாக தெரிகிறது. இதனை ராஜா, தனது நண்பர் சிவக்குமாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் அவர்கள் இருவரும் அருள்மணியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

அதன்படி, கடந்த 18-ந் தேதி இரவு சிவக்குமார், அருள்மணியை மது அருந்த தனது மொபட்டில் அழைத்துச் சென்றார். மாயனூர் காவிரி ஆற்றங்கரை சுடுகாட்டின் கிழக்கே உள்ள பழைய பரிசல்துறை அருகே அமர்ந்து அருள்மணி, ராஜா, சிவக்குமார் ஆகிய 3 பேரும் மது அருந்தினர். அதனைத்தொடர்ந்து மது போதையில் இருந்த அருள்மணியை அவர்கள் இருவரும் கொலை செய்து ஆற்றில் வீசிவிட்டு சென்று விட்டனர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலகவதி, ராஜா, சிவக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News