செய்திகள்
மின்சார நிறுத்தம்

செங்குன்றம், திருவொற்றியூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2020-11-17 05:21 GMT   |   Update On 2020-11-17 05:23 GMT
செங்குன்றம், திருவொற்றியூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

செங்குன்றம் மற்றும் சோழவரம்: பார்த்தசாரதி நகர், சிருணியம், குமரன் நகர், கம்மவார்பாளையம், சோழிபாளையம், கே.வி.டி.அவென்யூ, அலி நகர், ஒரக்காடு, பாளையம்.

திருவொற்றியூர்: டி.எச்.ரோடு, எஸ்.பி.கோவில் 1 முதல் 3-வது தெரு வரை, பெரியார் நகர், நேதாஜி நகர், வடக்கு மாட தெரு, திரு நகர் 1, 2-வது தெரு, கே.வி.குப்பம், ஈ.எச்.ரோடு, அஞ்சுகம் நகர், சக்திபுரம், ராஜீவ்காந்தி நகர், டி.என்.எஸ்.சி.வாரியம் 2, காந்தி நகர், சின்ன எர்ணாவூர், விம்கோ நகர்.

பராமரிப்பு பணி முடிவடைந்ததும் மதியம் 2 மணிக்கு மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News