செய்திகள்
சிறப்பு ரெயில்

சென்னை-திருப்பதி இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2020-11-17 02:38 GMT   |   Update On 2020-11-17 02:38 GMT
சென்னை-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை-திருப்பதி சிறப்பு ரெயில்(வண்டி எண்: 06057) வரும் 19-ந்தேதி காலை 6.25 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அன்று காலை 9.40 மணிக்கு திருப்பதி சென்றடையும்.

இதேபோல் திருப்பதி-சென்னை சிறப்பு ரெயில் (06008), வரும் 19-ந்தேதி காலை 10.45 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு, அன்று மதியம் 1.40 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News