செய்திகள்
அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிபட்டாசு வெடித்த 40 பேர் மீது வழக்கு
திருச்சி மாநகரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி:
தமிழகத்தில் தீபாவளி தினத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க நேரம் வழங்கப்பட்டு இருந்தது ஆனால் நேற்று முன் தினம் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நேற்று முன்தினம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெடிச் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது திருச்சி மாநகரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.