செய்திகள்
திருச்சி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
திருச்சி அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் இந்திராநகர் பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ரெத்தினம் (வயது 19) என்பவரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் திண்டுக்கல்ரோடு காவேரிநகர் பகுதியில் கஞ்சா விற்ற ராம்ஜிநகரைச் சேர்ந்த தர்மேந்திரன் (35), கல்மந்தை பொது கழிப்பிடம் அருகே கஞ்சா விற்ற வரகனேரியை சேர்ந்த மோகன்ராஜ் (22) ஆகியோரை காந்திமார்க்கெட் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரிடம் இருந்து தலா 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.