செய்திகள்
குழித்துறையில் வருகிற 17-ந் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
குழித்துறை:
முன்சிறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முன்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூர், ஐரேனிபுரம், விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காப்பட்டணம், ராமன்துறை ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை குழித்துறை மின் வினியோக செயற்பொறியாளர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.