செய்திகள்
விபத்து

மோட்டார் சைக்கிள் மோதி பனியன் நிறுவன கண்காணிப்பாளர் பலி

Published On 2020-11-15 09:35 GMT   |   Update On 2020-11-15 09:35 GMT
சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பனியன் நிறுவன கண்காணிப்பாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நல்லூர்:

காங்கேயம் கீரனூரை அடுத்த விஜயரங்கன் வலசு பகுதியை சேர்ந்தவர் சாமியப்பகவுண்டர் மகன் ஜெயகணேஷ் (வயது 28). இவர் திருப்பூர் வெள்ளியங்காடு கே.எம்.நகர் 5-வது வீதியில் வாடகை வீட்டில் வசித்தபடி பனியன் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி கார்த்திகா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். 

இந்த நிலையில் நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் பெருந்தொழுவுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். தாராபுரம் ரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனை எதிரில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியது. 

இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே ஜெயகணேஷ் பலியானார். இது குறித்து ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயகணேஷ் பிணத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News