செய்திகள்
கோப்புபடம்

தேனி அருகே மூதாட்டி தற்கொலை

Published On 2020-11-13 10:39 GMT   |   Update On 2020-11-13 10:39 GMT
தேனி அருகே மகன் இறந்த துக்கத்தில் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:

தேனி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுப்பையா. அவருடைய மனைவி வீருசின்னம்மாள் (வயது 72). இவர்களது மகன் ராஜேந்திரன், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், வீருசின்னம்மாள் தனது பேரன் வெற்றிவேல் பராமரிப்பில் இருந்து வந்தார். இருப்பினும் அவர் தனது மகன் இறந்த துக்கத்தில் அடிக்கடி புலம்பியபடி இருந்தார். மேலும், அவர் சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில், கடந்த 10-ந்தேதி அவர், தனது வீட்டில் அரளி விதையை தின்று தற்கொலைக்கு முயன்றார். வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவரை, வெற்றிவேல் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News