செய்திகள்
கல்லூரி மாணவிகள் (கோப்புப்படம்)

டிச.2ந்தேதி முதல் முதுநிலை இறுதியாண்டு வகுப்புகள் நடைபெறும்- தமிழக அரசு

Published On 2020-11-12 04:28 GMT   |   Update On 2020-11-12 04:28 GMT
டிச.2ந்தேதி முதல் முதுநிலை இறுதியாண்டு அறிவியல், தொழில்நுட்ப மாணவர்களுக்காக கல்லூரி, பல்கலைக்கழகம் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

டிச.2ந்தேதி முதல் முதுநிலை இறுதியாண்டு அறிவியல், தொழில்நுட்ப மாணவர்களுக்காக கல்லூரி, பல்கலைக்கழகம் திறக்கப்படும்.

அனைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்காகவும் டிச.2ந்தேதி  கல்லூரி, பல்கலைக்கழங்கள் திறக்கப்படுகிறது.

டிசம்பர்  2ந்தேதி திறக்கப்படும் கல்லூரிகளில் மட்டும் மாணவர்களுக்கான விடுதிகள் செயல்படும்.

இதர வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News