செய்திகள்
ஊத்துக்குளி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
ஊத்துக்குளி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்குளி:
ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி ஊராட்சி பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 33). இவர் தனது வீட்டில் துவைத்த துணிகளை காய வைப்பதற்காக கம்பியில் போட்ட போது துணி காயவைக்கும் கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரஸ்வதி உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.