செய்திகள்
கோப்புபடம்

திருத்துறைப்பூண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2020-11-07 06:39 GMT   |   Update On 2020-11-07 06:39 GMT
திருத்துறைப்பூண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன், சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு கஞ்சா விற்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மேட்டுப்பாளையம் கீழச்சேரி தெருவை சேர்ந்த நடேசன் மகன் முருகானந்தம் (வயது 29) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News