செய்திகள்
பேரளம் அருகே சாராயம், கஞ்சா விற்ற 3 பேர் கைது
பேரளம் அருகே சாராயம், கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் பேரளம் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேரளம் ரெயில்வே கேட் அருகே சந்தேகப்படும் வகையில் இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், பேரளம் வாய்க்கால் கரை தெருவை சேர்ந்த மோகன் (வயது20) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல பூந்தோட்டம் ரெயில்வே கேட் அருகே கஞ்சா விற்பனை செய்த மோட்டாத்தூர் பகுதியை சேர்ந்த புகழேந்தி என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பேரளம் அருகே பண்டாரவாடை திருமாளம் பகுதியில் சாராயம் விற்பனை செய்த செல்வமணி 42 என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் பேரளம் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேரளம் ரெயில்வே கேட் அருகே சந்தேகப்படும் வகையில் இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், பேரளம் வாய்க்கால் கரை தெருவை சேர்ந்த மோகன் (வயது20) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல பூந்தோட்டம் ரெயில்வே கேட் அருகே கஞ்சா விற்பனை செய்த மோட்டாத்தூர் பகுதியை சேர்ந்த புகழேந்தி என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பேரளம் அருகே பண்டாரவாடை திருமாளம் பகுதியில் சாராயம் விற்பனை செய்த செல்வமணி 42 என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.