செய்திகள்
கோப்புபடம்

கூத்தாநல்லூர் அருகே உறவினர் வீட்டில் நகை திருடிய இளம்பெண் கைது - 13 பவுன் நகைகள் மீட்பு

Published On 2020-11-05 11:11 GMT   |   Update On 2020-11-05 11:11 GMT
கூத்தாநல்லூர் அருகே உறவினர் வீட்டில் நகை திருடிய இளம்பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 13 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
கூத்தாநல்லூர்:

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், ஆஸ்பத்திரி சாலை தெருவை சேர்ந்தவர் ஹசன்முகமது. இவருடைய மனைவி சீமாமன்ஜீல்அலி (வயது24). ஹசன்முகமது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் சீமாமன்ஜீல்அலி தனது தாயாருடன் கணவர் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது தாயுடன் சீமாமன்ஜீல்அலி சென்றார். மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சீமாமன்ஜீல்அலி வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சீமாமன்ஜீல்அலி கூத்தாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சீமாமன்ஜீல்அலி உறவினரான கூத்தாநல்லூர் பெரிய தெருவை சேர்ந்த நசாருதீன் மனைவி ஆயிஷாஜில்பா (20) என்பவர் 13 பவுன் நகைகளை திருடியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் ஆயிஷா ஜில்பாவை கைது செய்து அவரிடம் இருந்த 13 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News