செய்திகள்
முத்தையாபுரத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
முத்தையாபுரத்தில் தாயாருடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் வேலாயுதம் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் மாரிச்சாமி (வயது 27) . இவருக்கும் மாலதி என்ற பெண்ணுக்கும், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக மாரிச்சாமி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, அவரது தாயாரிடம் குழம்பு வைக்கவில்லை என்று கூறி சண்டை போட்டு தூங்க சென்றாராம்.
சிறிது நேரம் கழித்து, வீட்டின் வெளிப்புற சன் சைடில் உள்ள கொக்கியில் தூக்குப்போட்டு மாரிச்சாமி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.