செய்திகள்
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம் தேதியை அறிவித்த சத்யபிரதா சாகு

Published On 2020-11-03 13:04 GMT   |   Update On 2020-11-03 13:04 GMT
கடந்த 3 மாதங்களில் சுமார் 30,000 இரட்டை பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட 9 கட்சிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது சத்யபிரத சாகு கூறியதாவது:

கடந்த 3 மாதங்களில் சுமார் 30,000 இரட்டை பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது தொடர்பாக நவம்பர் 21,22  மற்றும் டிசம்பர் 12,13 ஆகிய 4 நாட்கள்  சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News