செய்திகள்
தலைமைச் செயலாளர் சண்முகம்

மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச்செயலாளர் நாளை ஆலோசனை

Published On 2020-11-03 01:54 GMT   |   Update On 2020-11-03 01:54 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், தலைமைச்செயலாளர் கே.சண்முகம் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை:

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தலைமைச்செயலாளர் கே.சண்முகம் தொடர்ந்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் நாளை (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு, தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒழுங்குபடுத்துவது, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கான காப்பீடு,

ஊரக வீட்டுவசதி மற்றும் பழங்குடியினருக்கான வீட்டுவசதி, ஆன்லைன் பட்டா மற்றும் சில விவகாரங்கள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
Tags:    

Similar News