செய்திகள்
களக்காடு அருகே மது விற்ற 2 பேர் கைது
களக்காடு அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
களக்காடு:
களக்காடு போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது களக்காடு அருகே ராமகிருஷ்ணாபுரத்தில் மது விற்ற அப்பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனை (வயது 48) போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 6 மதுபாட்டில்கள், ரூ.150 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று திருக்குறுங்குடி அருகே தளவாய்புரத்தில் மது விற்றதாக அப்பகுதியைச் சேர்ந்த குமாரை (45) திருக்குறுங்குடி போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 4 மதுபாட்டில்கள், ரூ.150 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.