செய்திகள்
மின்சார நிறுத்தம்

நத்தக்காடையூர், ஓலப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2020-11-01 07:04 GMT   |   Update On 2020-11-01 07:04 GMT
நத்தக்காடையூர், ஓலப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
காங்கேயம்:

நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெறஉள்ளது. இதையொட்டி நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை, பறையகாட்டுவலசு, முள்ளிபுரம், பழைய வெள்ளியம்பாளையம், புதுவெள்ளியம்பாளையம், ரத்தினபுரி, ஓடக்காடு, குட்டறை, சித்தம்பலம் முள்வாடிப்பாளையம், மேலப்பாளையம், இட்சிக்காட்டுவலசு, மேட்டுகாட்டுவலசு, கஸ்பா பழையகோட்டை, சாமிநாதபுரம் குட்டப்பாளையம், பழையகோட்டைபுதூர், புதுவெங்கரையாம்பாளையம், வசந்தநகர் மற்றும் ஈரோடு மாவட்டம் சகாயபுரம், குமாரபாளையம், வடபழனி, புதுவலசு, கண்ணம்மாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

இதேபோல் வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி ஓலப்பாளையம், கண்ணபுரம், பகவதிபாளையம், வீரணம்பாளையம், வீர சோழபுரம், காங்கேயம்பாளையம், செட்டிபாளையம், முருகன் காட்டுவலசு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது. இத்தகவலை காங்கேயம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் அருள்செல்வி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News