செய்திகள்
விபத்து பலி

நாகமலைபுதுக்கோட்டை அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2020-10-31 08:56 GMT   |   Update On 2020-10-31 08:56 GMT
நாகமலைபுதுக்கோட்டை அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகமலைபுதுக்கோட்டை:

நாகமலைபுதுக்கோட்டை மேல தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் நவீன்(வயது 22) . இவர் நாகமலைபுதுக்கோட்டையில் மதுரை-தேனி மெயின் ரோட்டில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த நவீன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News