செய்திகள்
முககவசம் அணியாத 246 பேர் மீது வழக்கு
நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் நடமாடிய 243 பேர் மீதும், பொதுஇடங்களில் எச்சில் துப்பியதாக 3 பேர் மீதும் என 246 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நாமக்கல்:
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் நடமாடுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் நடமாடிய 243 பேர் மீதும், பொதுஇடங்களில் எச்சில் துப்பியதாக 3 பேர் மீதும் என 246 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50,100 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 20 இடங்களில் முககவசம் அணியாமல் நடமாடிய 260 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கொரோனா விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினர்.