செய்திகள்
திருட்டு

சேலத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

Published On 2020-10-28 10:36 GMT   |   Update On 2020-10-28 10:36 GMT
சேலத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் 6 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயி. இவருடைய மனைவி சந்திரா (வயது 57). சம்பவத்தன்று இரவு கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். பின்னர் அதிகாலை கிருஷ்ணமூர்த்தி கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் வந்தார். அதே நேரத்தில் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த சந்திரா கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை முகமூடி அணிந்து இருந்த மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். அவரை கிருஷ்ணமூர்த்தி பிடிக்க முயன்ற போது முடியவில்லை.

இது குறித்து அவர் வீராணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்துச்சென்ற முகமூடி அணிந்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News