செய்திகள்
நாட்டறம்பள்ளியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி கிராம நிர்வாக அலுவலகம் எதிரில் ஆத்தூர்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கவுசிக், நாட்டறம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் ஆகியோர் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும், இலவசமாக முக கவசங்களும் வழங்கப்பட்டது.
அப்போது பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் ஆத்தூர்குப்பம் மருத்துவ பணியாளர்கள் உடன் இருந்தனர்.