செய்திகள்
அய்யலூர் அருகே விபத்தில் தொழிலாளி பலி
அய்யலூர் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
அய்யலூரை அடுத்த சுக்காம்பட்டி அருகே உள்ள ஒண்டிபொம்மன்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் வேலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அய்யலூரில் உள்ள கடவூர் பிரிவு அருகே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது அந்த வழியாக சென்ற வாகனம் மாணிக்கத்தின் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.