செய்திகள்
கோப்புபடம்

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2020-10-23 12:04 GMT   |   Update On 2020-10-23 12:04 GMT
திருவள்ளூர் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் ஒண்டி குப்பத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் ஹரிஷ் (வயது 22) .இவர் சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அவர் வேலையை முடித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் மணவாளநகர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் குப்பம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக ஏறி இறங்கியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஹரிஷ் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது தந்தை சீனிவாசன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News