செய்திகள்
தர்மபுரி அருகே செல்போன் கடையில் உதிரிபாகங்கள் திருட்டு
தர்மபுரி அருகே செல்போன் கடையில் உதிரிபாகங்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 21). இவர் தர்மபுரி பஸ் நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வியாபாரம் முடிந்தபின் கடையை பூட்டி சென்றார். இந்த நிலையில் கடையை மீண்டும் திறந்த போது கடைக்குள் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான செல்போன் உதிரிபாகங்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக சுரேஷ் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.