செய்திகள்
வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் அருகே உள்ள அயன்பேறையூரை சேர்ந்தவர் ரகோத்தமன்(வயது 34). வெளிநாட்டில் வேலை பார்த்த இவர், பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.
நேற்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
அப்போது வீட்டில் வைத்திருந்த சுமார் 9 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து ரகோத்தமன் வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் அருகே உள்ள அயன்பேறையூரை சேர்ந்தவர் ரகோத்தமன்(வயது 34). வெளிநாட்டில் வேலை பார்த்த இவர், பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.
நேற்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
அப்போது வீட்டில் வைத்திருந்த சுமார் 9 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து ரகோத்தமன் வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.