செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மூடை

தூத்துக்குடியில் 2 டன் மஞ்சள் பிடிபட்டது

Published On 2020-10-19 18:19 GMT   |   Update On 2020-10-19 18:19 GMT
தூத்துக்குடியில் வீட்டில் உரிய அனுமதியின்றி 20 மூட்டைகளில் சுமார் 2 டன் காய்ந்த மஞ்சள் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
தூத்துக்குடி:

தூத்துக்குடி வடபாகம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் உரிய அனுமதியின்றி 20 மூட்டைகளில் சுமார் 2 டன் காய்ந்த மஞ்சள் இருந்தது. இதனை அந்த வீட்டில் இருந்த நபர் ஆன்லைனில் வாங்கியதாக தெரிவித்து உள்ளார். இருப்பினும் அந்த மஞ்சள் மூட்டைகளை அதிக அளவு அங்கு வைத்திருக்க உரிய அனுமதி பெறப்படவில்லை என்பதால் போலீசார் சந்தேகம் அடைந்து உணவு பொருள் பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்து உள்ளனர். அவர்கள் அந்த மஞ்சளின் சிறிது மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News