செய்திகள்
19 வழக்கில் தொடர்புடைய வழிப்பறி கொள்ளையன் மீண்டும் கைது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, திருச்சி மணிகண்டம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 19 வழக்குகளில் தொடர்புடைய வழிப்பறி கொள்ளையன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
திருச்சி:
திருச்சி வயலூர் ரோடு ராமலிங்க நகர் தெற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). நேற்று முன்தினம் இவர் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது புத்தூர் மேல வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற முட்டை மணி (26) அங்கு வந்தார். செந்தில்குமார் கையில் வைத்திருந்த செல்போனை மணிகண்டன் பறித்துக்கொண்டு ஓடினார். இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டனை விரட்டி பிடித்து அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மணிகண்டன் மீது ஏற்கனவே அரசு மருத்துவமனை போலீஸ் நிலையம், உறையூர் மற்றும் கரூர் மாவட்டம் பசுபதிபாளையம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, திருச்சி மணிகண்டம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 19 வழக்குகள் உள்ளன. இதில் சில வழக்குகளில் அவர் தண்டனை அடைந்து உள்ளதும், சில வழக்குகளில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருச்சி வயலூர் ரோடு ராமலிங்க நகர் தெற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). நேற்று முன்தினம் இவர் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது புத்தூர் மேல வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற முட்டை மணி (26) அங்கு வந்தார். செந்தில்குமார் கையில் வைத்திருந்த செல்போனை மணிகண்டன் பறித்துக்கொண்டு ஓடினார். இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டனை விரட்டி பிடித்து அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மணிகண்டன் மீது ஏற்கனவே அரசு மருத்துவமனை போலீஸ் நிலையம், உறையூர் மற்றும் கரூர் மாவட்டம் பசுபதிபாளையம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, திருச்சி மணிகண்டம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 19 வழக்குகள் உள்ளன. இதில் சில வழக்குகளில் அவர் தண்டனை அடைந்து உள்ளதும், சில வழக்குகளில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.