செய்திகள்
விருதுநகர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
விருதுநகர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சண்முக சுந்தரபுரம் பகுதியில் வச்சகாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ சுலோச்சனா ரோந்து பணிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்தார். அதிலிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், சண்முக சுந்தரபுரத்தை சேர்ந்த பாண்டியன் (வயது70) என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தார். அதேபோல விருதுநகர் கஸ்தூரி பாய் நகரில் ரமேஷ் (34) என்பவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பாண்டியன் நகர் போலீசார் பறிமுதல் செய்து, ரமேசை கைது செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.