செய்திகள்
கொரோனா வைரஸ்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா

Published On 2020-10-17 09:16 GMT   |   Update On 2020-10-17 09:16 GMT
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை செய்யப்பட்ட பரிசோதனை விவரம் வெளியிடப்படவில்லை. பரிசோதனை செய்யப்பட்டதா என்பதும் தெரியவில்லை.

நேற்று முன்தினம் 14,946 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 531 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். முகாமில் 4 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 172 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாடர்ன் நகரை சேர்ந்த 39 வயது பெண், பாண்டியன் நகர் விவேகானந்தா தெருவை சேர்ந்த 59 வயது முதியவர், சிவகாசி ரிசர்வ் லைன் பாரதிநகரை சேர்ந்த 29 வயது நபர், விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த 29 வயது பெண், ஆவுடையாபுரத்தை சேர்ந்த 50 வயது நபர், ஆலங்குளம், ராஜபாளையம், கோபாலபுரம், கந்தன்பட்டியை சேர்ந்த 2 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 984 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கிராமங்களில் தான் அதிகமாக உள்ளது. மாவட்ட சுகாதார துறையினர் நேற்று முன்தினம் செய்த மருத்துவ பரிசோதனை முடிவுகளை வெளியிட தாமதப்படுத்தியதற்கான காரணம் தெரியவில்லை.

பரிசோதனை முடிவுகளை வெளியிட தாமதம் ஏற்பட்டு வந்த நிலையிலும், தற்போது பரிசோதனை எண்ணிக்கையை தெரிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மேலும் மாநில சுகாதார துறையினர் வெளியிடும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பட்டியலும், மாவட்ட சுகாதார துறையினர் வெளியிடும் பட்டியலும் முற்றிலும் முரண்பாடான நிலை உள்ளது. இதனை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மருத்துவ பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதிலும் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tags:    

Similar News