செய்திகள்
திருச்சியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
திருச்சியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி பாலக்கரை கீழக்கல்லுக்கார தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 78). தனியாக வசித்து வந்த விஜயலட்சுமி வயது மூப்பு காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்து தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.