செய்திகள்
மருத்துவ முகாம்

நாரணமங்கலத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை

Published On 2020-10-13 05:21 GMT   |   Update On 2020-10-13 05:21 GMT
நாரணமங்கலத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்த மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். தற்போது பருவமழை பெய்து வரும் நிலையிலும், மழையை பொருட்படுத்தாமல் அவர்கள் விவசாய வேலைகளை செய்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் என உடல்நிலை பாதிக்கப்படும் நிலை உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், இந்த கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News